கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது

கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது;

Update: 2025-02-16 06:29 GMT
அரக்கோணம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிவேல் தலைமையிலான போலீசார் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் தீவிர ரோந்து மற்றும் வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி நேற்று அரக்கோணம் அடுத்த எஸ்.ஆர்.கண்டிகை, சாலை உள்ளிட்ட பகுதியில் ரோந்து பணியில் இருந்தனர். அப்போது சாலை பேருந்து நிறுத்தம் பகுதியில் சந்தேகிக்கும் வகையில் சுற்றி கொண்டி ருந்த நபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அதில் அவர் அரக்கோணம் அடுத்த வேடல் பகுதியை சேர்ந்த செல்வராஜ் (வயது 46). என்பதும் கொலை வழக்கு ஒன்றில் தலைமறைவாக இருந்து வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து செல்வ ராஜை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News