ராமசாமிபுரத்தில் உரிய அங்கீகாரம் இல்லாமல் தனியார் நர்சிங் கல்லூரி நடத்தி மாணவிகளை ஏமாற்றியதாக கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகார் அடிப்படையில் கல்லூரி தாளாளர் கைது*
ராமசாமிபுரத்தில் உரிய அங்கீகாரம் இல்லாமல் தனியார் நர்சிங் கல்லூரி நடத்தி மாணவிகளை ஏமாற்றியதாக கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகார் அடிப்படையில் கல்லூரி தாளாளர் கைது*;
அருப்புக்கோட்டை அருகே ராமசாமிபுரத்தில் உரிய அங்கீகாரம் இல்லாமல் தனியார் நர்சிங் கல்லூரி நடத்தி மாணவிகளை ஏமாற்றியதாக கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகார் அடிப்படையில் கல்லூரி தாளாளர் கைது விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ராமசாமிபுரத்தில் தமிழ்நாடு மகளிர் கல்லூரி என்ற தனியார் நர்சிங் கல்லூரி செயல்பட்டு வந்தது. இந்த கல்லூரியில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திண்டுக்கல், கொடைக்கானல், ஊட்டி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து சுமார் 222 மாணவிகள் இங்கு படித்து வந்தனர். இந்நிலையில் இந்த கல்லூரிக்கு டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தால் முறையான எந்தவித அங்கீகாரமும் வழங்கப்படவில்லை என புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து கடந்த ஒரு வாரத்திற்கு முன் அந்த கல்லூரியில் படித்து வந்த மாணவிகள் தாங்கள் கல்லூரியில் சேரும்போது வழங்கிய அசல் சான்றிதழ்கள் மற்றும் கல்வி கட்டணத்தை திரும்ப வழங்க வலியுறுத்தி கடந்த இரண்டு தினங்களாக உள்ளிருப்பு போராட்டம் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவிகளின் போராட்டத்தை தொடர்ந்து இந்த கல்லூரியில் படித்த மாணவிகள் அனைவருக்கும் அவர்கள் வழங்கிய கல்வி சான்றிதழ் திரும்ப வழங்கப்பட்டது. மேலும் அவர்கள் செலுத்திய கல்வி கட்டணம் திரும்ப வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாணவிகளின் போராட்டம் காரணமாக விருதுநகர் மாவட்ட மருத்துவக் கல்லூரி இணை இயக்குநர் பாபுஜி தலைமையில் மருத்துவக் கல்லூரி அதிகாரிகள் கல்லூரியில் ஆய்வு செய்தனர். அப்போது அந்த கல்லூரிக்கு டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தால் முறையான எந்தவித அங்கீகாரமும் வழங்கப்படவில்லை என தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து கோட்டாட்சியர் வள்ளிக்கண்ணு மாணவிகளை ஏமாற்றிய கல்லூரி தாளாளர் டிக்காக் ஜாக்சன்(39) கைது செய்யப்படுவார் என கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று பிப்ரவரி 15 அருப்புக்கோட்டை டவுன் கிராம நிர்வாக அலுவலர் பத்மாவதி புகாரின் பேரில் உரிய அங்கீகாரம் இல்லாமல் கல்லூரி நடத்தி மாணவிகளை ஏமாற்றியதாக கல்லூரி தாளாளர் டிக்காக் ஜாக்சனை நகர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.