கள்ளச்சாராய கொலை வழக்கில் சாராய வியாபாரி தம்பதியினர் கைது
மயிலாடுதுறை அருகே முட்டம் பகுதியில் சாராய வியாபாரிகளால் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஏற்கனவே சிறைக்கு அனுப்பப்பட்ட நபர்களின் பெற்றோர் கைது;
மயிலாடுதுறை மாவட்டம் முட்டம் கிராமத்தில் பிப்ரவரி 14 ஆம் தேதி இளைஞர்கள் இரட்டை கொலை செய்யப்பட்ட வழக்கில், ஏற்கனவே தங்கதுரை, மூவேந்தன் உள்பட மூவர் கைது செய்யப்பட்ட நிலையில், வழக்கின் விசாரணையில், சாராய வியாபாரிகள் தங்கதுரை, மூவேந்தன் ஆகியோரது பெற்றோர்களான சாராய வியாபாரிகள் முனுசாமி- மஞ்சுளா ஆகியோரை போலீசார் கைது செய்து மயிலாடுதுறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி முனுசாமியை கடலூர் சிறைக்கும், மஞ்சுளாவை திருச்சி சிறைக்கும் அனுப்பி வைத்தனர்.