மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாய குறை தீர்வு கூட்டத்தில் உலக தாய்மொழி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது!
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாய குறை தீர்வு கூட்டத்தில் உலக தாய்மொழி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது!;
திருப்பத்தூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாய குறை தீர்வு கூட்டத்தில் உலக தாய்மொழி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது! திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உலக தாய்மொழி நாள் முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி தலைமையில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் நடைபெற்றது இதில் விவசாயிகள் மற்றும் அரசு அதிகாரிகள் முன்னிலையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது எங்கும் தமிழ் எதிலும் தமிழ் எப்போதும் தமிழ் என்ற நடைமுறையைக் கொண்டுவரப் பாடுபடுவோம், தேமதுர தமிழோசை உலகமெங்கும் ஒலிக்க எந்நாளும் உழைத்திடுவோம். அனைத்து ஆவணங்களிலும் தமிழிலேயே கையொப்பமிடுவோம் குழந்தைகளுக்கு தமிழ் மொழியில் பெயர் சூட்ட பரப்புரை செய்திடுவோம், இணையற்ற தமிழுடன் இணையத் தமிழையும் காத்து வளர்ப்போம் என்று உலகத்தமிழ் மொழி நாளான இன்று உளமாற உறுதி கூறுகிறேன், என்று உறுதி மொழி ஏற்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் விவசாயிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது