கள்ளக்குறிச்சியில் 5 மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். மணிக்கண்ணன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்ரமணி வரவேற்றார்.நிகழ்ச்சியில் தலா 1.10 லட்சம் ரூபாய் மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர்களை 5 மாற்றுத் திறனாளிகளுக்கு கலெக்டர் வழங்கினார்.