கள்ளக்குறிச்சி பத்ரகாளியம்மன் கோவிலில் நிகும்பலா யாகம் நடந்தது.மாசி மாத அமாவாசையொட்டி, உலக அமைதி மற்றும் தோஷ நிவர்த்திக்காக நேற்று முன்தினம் இரவு அம்மனுக்கு சிறப்பு அலங்கார, அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது.அம்மன் கவச பாடல்கள் பாடப்பட்டு குங்கும அர்ச்சனை, ஊஞ்சல் தாலாட்டு உற்சவம் நடந்தது.மேலும் பெரியாண்டச்சி அம்மன், நாகாத்தம்மன், உள்ளிட்ட உற்சவர்களுக்கு, மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மிளகாய் வற்றல் கொண்டு யாகம் நடந்தது.