போடி பகுதியை சேர்ந்தவர் சிவரஞ்சனி (29). இவரது கணவர் சுரேஷ்குமார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்த நிலையில் கணவர் மனைவி இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் தம்பதியினர் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் அதனால் மனம் உடைந்த சிவரஞ்சனி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போடி நகர் போலீசார் நேற்று (பிப்.28) வழக்கு பதிவு செய்து விசாரணை.