உப்புக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் பொன்னுமணி (49). இவர் அப்பகுதியில் நின்று கொண்டிருந்த சுருளிராஜ் மற்றும் அவருடன் நின்றிருந்த சிலரை அருவருக்கத்தக்க வகையில் ஆபாசமாக பேசியதாக சுருளிராஜ் வீரபாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வீரபாண்டி போலீசார் பொன்னுமணி மீது வழக்குப்பதிவு செய்து நேற்று (பிப்.28) அவரை கைது செய்தனர்.