சேலம் அருகே தண்டவாளத்தில் படுத்து தொழிலாளி தற்கொலை
ரயில்வே போலீசார் விசாரணை;
சேலம் ரயில்வே ஸ்டேஷனுக்கும், வீரபாண்டி ரயில்வே ஸ்டேஷனுக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள சிவதாபுரம் ரயில்வே பால பகுதியான தண்டவாளத்தில் நேற்று உடல் இரண்டு துண்டான நிலையில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து கிடந்தார். இது பற்றி தகவல் தெரிந்த சேலம் ரயில்வே போலீஸ் எஸ்ஐ பாலமுருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். அதில் அந்த நபர் ரயில் வரும்போது தண்டவாள பகுதிக்கு சென்று படுத்து தற்கொலை செய்து இருப்பது தெரியவந்தது. கூலி வேலை பார்க்கும் தொழிலாளி போல் இருக்கும் அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என தெரியவில்லை. இளம் பச்சை நிற கட்டம் போட்ட சட்டை, நீல நிற ஜீன்ஸ் பேண்ட் அணிந்து உள்ளார். இறந்தவரின் சடலத்தை சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அவர் யார் என ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.