தேனி மாவட்டம் இராயப்பன்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியராஜா (52). கடந்த ஒரு வருடமாக மனநலம் பாதித்த நிலையில் இருந்த இவர் நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். வீடு திரும்பாத நிலையில் நேற்று (மார்ச் .8) இவரது சகோதரர் தோட்டத்திற்கு சென்று பார்த்துள்ளார் அங்கு ஆரோக்கியராஜா மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். மருத்துவமனையில் மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். போலீசார் விசாரணை.