கம்பம் பகுதியை சேர்ந்தவர் சுருதிகா (36). இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. இதனால் மன வேதனையில் இருந்த சுருதிகா நேற்று முன்தினம் (மார்.8) அவரது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கம்பம் வடக்கு போலீசார் நேற்று (மார்.9) வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.