திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகின்றது. இந்த நிலையில் இன்று மாவட்ட நிர்வாகம் மாலை 4:30 மணி மழை அளவு நிலவரம் வெளியிட்டுள்ளது. அதில் எட்டு மணி நேரத்தில் மொத்தம் 168.60 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக நாங்குநேரியில் 22 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.