பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது;

Update: 2025-03-13 14:42 GMT
விருதுநகரில் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட குழந்தைகள் பாதுகாப்பு ,போதை விழிப்புணர்வு மற்றும் சமூக நலன் குறித்த விழிப்புணர்வு பேரணி - பள்ளி மாணவ, மாணவிகள் அப்துல் கலாம், அன்னை தெரசா, விவசாயி, மருத்துவர் போன்ற முக்கிய தலைவர்களின் வேடமணிந்து பங்கேற்பு - மேற்கு காவல் நிலைய காவல் ஆய்வாளர் துவக்கி வைப்பு... விருதுநகர் அரசு உதவி பெறும் ஆண்கள் நடுநிலைப் பள்ளியில் இருந்து தனியார் ஆங்கில மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் மற்றும் லயன்ஸ் கிளப் ஆப் விருதுநகர் இணைந்து நடத்திய , குழந்தைகள் பாதுகாப்பு, போதை விழிப்புணர்வு, மற்றும் சமூக நலக் குறித்த விழிப்புணர்வு பேரணியை மேற்கு காவல் நிலைய காவல் ஆய்வாளர் நம்பிராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தார் இந்தப் பேரணியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ மாணவிகள், அப்துல் கலாம், அன்னை தெரசா, விவசாயி மருத்துவர், செவிலியர், பாரதமாதா , ஆசிரியர், வழக்கறிஞர், காவல்துறை போன்றவர்களின் வேடமணிந்து, போதையை ஒழிப்போம் பாதையை வளர்ப்போம், போதை வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு ,போதை மரணத்தின் பாதை மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் ,வனம் செய்வோம் வளம் மீட்போம் உயிர் காப்போம், விடை சிறிது விதை பெரிது பேரிடர் மீட்புப் பணிகள் செய்வோம், மனிதநேய உதவிகள் புரிவோம் ,பார்வை இழந்தவர்களுக்கு உதவிடுவோம், பசிப்பிணியை ஒழிப்போம் ரத்ததானம் செய்வோம் குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் சட்டமே போக் சோ சட்டம்,நெகிழியை ஒழிப்போம் நம் பூமியை காப்போம் , துணி பையை உபயோகித்து இயற்கையை காப்போம் பிளாஸ்டிக் தவிர்ப்பில் சுற்றுச்சூழலை காப்பீர் பிளாஸ்டிக் தீமையிலிருந்து நம் மண்ணையும் நம் மக்களையும் காப்போம், போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த பேரணியில் கலந்து கொண்டனர் இந்தப் பேரணியானது விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் ஆரம்பித்து, மாரியம்மன் கோவில், மெயின் பஜார் , தெப்பம், மேலத்தெரு மற்றும் நகரின் முக்கிய வீதி வழியாக வந்து மீண்டும் அதே பள்ளியில் முடிவடைந்தது

Similar News