கருணாநிதி இல்லம் சென்று ஆசி பெற்ற குறிஞ்சிப்பாடி அமைச்சர்
கருணாநிதி இல்லம் குறிஞ்சிப்பாடி அமைச்சர் ஆசி பெற்றார்.;
தமிழ்நாடு சட்டசபையில் 2025-2026 ஆண்டிற்கான தனி வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன்பு கலைஞர் இல்லத்திற்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மற்றும் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் சென்று முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பட்ஜெட் தாக்கல் உரையை வைத்து வணங்கி ஆசி பெற்றார். உடன் அதிகாரிகள் மற்றும் திமுகவினர் கலந்து கொண்டனர்.