நாய் பாய்ந்ததில் பைக்கில் இருந்து விழுந்தவர் பலி

நாகர்கோவில்;

Update: 2025-03-15 04:15 GMT
கன்னியாகுமரி அருகே தென் தாமரை குளம் பகுதியை சேர்ந்தவர் ராஜன் (44).  இவருக்கு திருமணம் ஆகி ராதா (39) என்ற மனைவியும் 11 வயதில் ஒரு மகனும்  உள்ளனர். ராஜன்  சொந்தமாக டீக்கடை நடத்தி வந்தார்.      இவர் கடந்த 12ஆம் தேதி இரவு டீக்கடைக்கு தேவையான பொருட்களை கோட்டாரில் வாங்கி விட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீடு செல்வதற்காக ஈத்தங்காடு பகுதியில் சென்று கொண்டிருந்தார். சாமித்தோப்பில் உள்ள தனியார் பள்ளி பகுதியில் செல்லும்போது நாய் ஒன்று திடீரென குறுக்கே பாய்ந்ததில் ராஜன்  நிலை தடுமாறி இருசக்கர வாகனத்துடன் ரோட்டில் விழுந்து உள்ளார்.        இதில் அவருக்கு தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. அவரை மீட்டு சுசீந்திரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுப்பி உள்ளனர். மேல் சிகிட்சைக்காக குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜன் நேற்று மாலையில் உயிரிழந்தார். தென் தாமரைகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News