அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்!
தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் மல்லிகா தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் தேர்தல் வாக்குறுதியின்படி சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியருக்கு பட்ஜெட்டில் குறைந்தபட்ச சிறப்பு ஓய்வூதியம் ரூ.6,750 அகவிலைபடியுடன் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.