சேலத்தில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
வீட்டு வேலை சரியாக செய்யவில்லை என தாய் திட்டியதால் விபரீதம்;

சேலம் அருகே உள்ள குப்பனூரை சேர்ந்தவர் பூபாலன். இவருடைய மகள் ஹரிணி (வயது 21). இவர் சேலம் அரசு கலைக்கல்லூரியில் பி.எஸ்சி. இறுதியாண்டு படித்து வந்தார். ஹரிணி வீட்டு வேலைகளை சரியாக செய்யாததால் அவரது தாய் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஹரிணி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். உயிருக்கு ஆபத்தான நிலையில் ஹரிணியை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனையில் அவர் வரும் வழியிலேயே இறந்தது தெரியவந்தது. ஹரிணி தற்கொலை செய்து கொண்டது குறித்து வீராணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.