கம்பம் புதுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சத்தியன். இவருக்கு அப்பகுதியில் சொந்தமாக தென்னந்தோப்பு உள்ளது. நேற்று (மார்.18) தோப்பிற்குள் புகுந்த நவநீதன் உள்ளிட்ட நான்கு பேர் அங்குள்ள தென்னை மரங்களை வெட்டி உள்ளனர். இதுகுறித்து சத்தியன் தட்டி கேட்ட நிலையில் நவநீதன் தான் வைத்திருந்த அறிவாளால் சத்தியனை வெட்டி உள்ளார். இது குறித்த புகாரில் 4 பேர் வழக்கு பதிவு செய்த போலீசார் நவநீதனை கைது செய்தனர்.