பள்ளி மாணவர்களின் விடுதியை ஆய்வு செய்த ஆட்சியர்.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியில் உங்களைத் தேடி உங்கள் ஊர் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார் அதன் ஒரு பகுதியாக குடவாசல் மாணவிகள் தங்கும் விடுதியினை நேரில் பார்வையிட்ட ஆய்வு செய்தார்.;

Update: 2025-03-20 18:21 GMT
பள்ளி மாணவர்களின் விடுதியை ஆய்வு செய்த ஆட்சியர்.
  • whatsapp icon
திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டத்திற்குட்பட்ட பகுதியில் தமிழ்நாடு முதலமைச்சரின் உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மோகனச்சந்திரன் முகாமிட்டு கள ஆய்வு மேற்கொண்டார். மக்களை நாடி, மக்கள் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காண தமிழ்நாடு முதலமைச்சர் அவரால் அறிவிக்கப்பட்ட “உங்களைத்தேடி, உங்கள் ஊரில்” திட்டம் ஒவ்வொரு மாதமும், ஒரு வருவாய் வட்டத்தில் நடைபெற வேண்டும் என்பதன் அடிப்படையில் இன்றைய தினம், திருவாரூர் மாவட்டத்தில் 2025 மார்ச் மாதத்திற்கான முகாம் திருவாரூர் வட்டத்திற்குட்பட்ட பகுதியில் 19-03-2025 காலை 9.00 மணி முதல் 20-03-2025 காலை 9.00 மணி வரை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அவர்கள் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டதுடன், அனைத்து அரசு துறை உயர் அலுவலர்களும் வருவாய் வட்டத்தில் கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து மக்களின் குறைகளை கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி தகுதியான மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்யும் பொருட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குடவாசல் ஆதிதிராவிட நல மாணவியர் விடுதியில் மாணவியர்களுக்கு வழங்கப்படும் உணவு தரமானதாக உள்ளதா எனவும், போதியளவு குடிநீர் வசதி, கழிப்பறையின் தூய்மை குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாணவியர்களிடம் கேட்டறிந்தார்கள்.

Similar News