திடீரென தீ பிடித்து எரிந்த கார்

திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே திடீரென தீ பிடித்து எரிந்த கார் - உடனடியாக தீயை அனைத்த தீயணைப்புத் துறையினர்;

Update: 2025-03-21 05:30 GMT
திருச்சி திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் 29. இவர் கார் வாங்கி விற்கும் தொழில் செய்கிறார். இந்த நிலையில் திருச்சியில் இருந்து காரில் திண்டுக்கல் வந்தார். அப்போது காரை திண்டுக்கல் வடக்கு போலீஸ் ஸ்டேஷன் அருகே நிறுத்தியிருந்தார். திடீரென ரேடியேட்டரில் தீப்பிடித்து கார் பற்றி எரிந்தது. இதை கண்ட போலீசார் அக்கம்பக்கத்தினர் காரில் பிடித்த தீயை அணைக்க முயன்றனர். தகவல் அறிந்த திண்டுகல் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து காரில் பிடித்த தீயை அணைத்தனர். அதற்குள் காரின் முன் பகுதி முழுவதும் தீயில் எரிந்து நாசமானது. இது குறித்து திண்டுக்கல் வடக்கு போலீசார் காரை பறிமுதல் செய்து தீ பிடித்ததற்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News