வைரவர் கோவிலில் சிறப்பு பூஜைகள்

மதுரை திருமங்கலம் அருகே தேய்பிறை அஷ்டமி தினத்தை முன்னிட்டு வைரவர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.;

Update: 2025-03-22 15:35 GMT
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகில் கூடக்கோயில் கண்மாய்கரை பகுதியில் உள்ள வைரவர் திருக்கோவிலில் இன்று (மார்ச்.22) மாலை தேய்பிறை அஷ்டமி தினத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு அலங்காரத்தில் ஆராதனைகள் பூஜைகள் நடைபெற்றன. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வைரவரை தரிசனம் செய்தனர்.வழிப்பாட்டிற்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தது.

Similar News