ராமநாதபுரம் பாஜக சார்பில் கருப்புக்கொடி இந்தியா ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
ராமேஸ்வரத்தில் மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமையில் பாஜகவின் ஆர்ப்பாட்டம் நடத்தினர்;
தமிழகத்தில் மது கடைகளை ஒழிக்க வேண்டும்,பூரண மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என்ற முழக்கத்தை முன்னெடுத்து பாஜக சார்பில் இன்று பாஜக நிர்வாகிகள்,தொண்டர்கள் இல்லங்களில் கருப்பு கொடி கட்டி போராட்டம் நடைபெறும் என மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார்,அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்ட பாஜக தலைவர் முரளிதரன் தலைமையில், ராமேஸ்வரத்தில் உள்ள அவரது இல்லம் முன்பு வேண்டாம், வேண்டாம் மதுக்கடைகள் வேண்டாம் என்ற கோஷமிட்டு கருப்புக்கொடியை கையில் வைத்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டார். இதில் ராமேஸ்வரத்தை சேர்ந்த பாஜகவினர் பலர் கலந்து கொண்டனர்.