கரூரில் நடைபெற்ற பாமக மாவட்ட செயற்குழு கூட்டத்தில் மூன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்.

கரூரில் நடைபெற்ற பாமக மாவட்ட செயற்குழு கூட்டத்தில் மூன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்.;

Update: 2025-03-23 09:03 GMT
கரூரில் நடைபெற்ற பாமக மாவட்ட செயற்குழு கூட்டத்தில் மூன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம். கரூர் ஜவகர் பஜார் பகுதியில் உள்ள தனியார் கூட்டரங்கில், பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் கட்சியின் மாவட்ட செயலாளர் பி எம் கே பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட தலைவர் தமிழ்மணி, கரூர் மாநகர செயலாளர் ராக்கி முருகேசன் உள்ளிட்ட மாவட்ட அளவிலான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் நிறைவில், வரும் மே 11-ம் தேதி சென்னை அருகே மாமல்லபுரத்தில் நடைபெறும் சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மற்றும் சமூக நீதி மாநாட்டில் கரூரிலிருந்து நூறு வாகனங்களில் ஐந்தாயிரம் பேர் பங்கேற்பது எனவும், இதற்காக ஐந்து குழு அமைக்கப்பட்டு அனைவரையும் ஒருங்கிணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனவும், கரூர் மாவட்டத்தில் உள்ள ஏரி,குளம், ஆறுகளை பாதுகாக்கவும், நீர்நிலைகளை வேறு எந்த ஒரு பயன்பாட்டிற்கும் அனுமதி வழங்குவதை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்திட வேண்டும் எனவும், வரும் மார்ச் 29ஆம் தேதி நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் இதற்கான தீர்மானத்தை அனைத்து ஊராட்சிகளிலும் நிறைவேற்ற ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தமிழகத்தில் அதிக வெயில் அடிக்கும் பகுதியாக கரூர் மாவட்டம், க.பரமத்தி மாறி உள்ளது. சமீப காலத்தில் ஏற்பட்டிருக்கும் இந்த கால சூழ்நிலை மாற்றத்திற்கு முக்கிய காரணம் இப்பகுதியில் தொடர்ந்து அளவுக்கு அதிகமாக கல்குவாரிகள் உருவாகி வருவது தான். எனவே, கரூர் மாவட்ட நிர்வாகம் இது குறித்து கள ஆய்வு செய்து கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட மூன்று தீர்மானங்களை நிறைவேற்றினர்.

Similar News