சுப்ரமணியசாமி திருக்கோவிலில் முருகனுக்கு சிறப்பு பூஜை!
சுப்ரமணியசாமி திருக்கோவிலில் முருகனுக்கு பங்குனி மாத செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.;

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த காமாட்சி அம்மன் பேட்டையில் அமைந்துள்ள சுப்ரமணியசாமி திருக்கோவிலில் முருகனுக்கு பங்குனி மாத செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் முருகனுக்கு சிறப்பு அலங்காரமாக வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.