குமரி : உளுந்து சாகுபடி பணி தீவிரம்

நாகர்கோவில்;

Update: 2025-03-27 00:37 GMT
குமரி மாவட்டத்தில் சுமார் 6,500 ஹெக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி நடந்து வருகிறது.  மாவட்டத்தில் கும்பபூ அறுவடை பணி முடியும் நிலையில் உள்ளது. கன்னிப் பூ சாகுபடிக்காக மே மாதம் நாற்றங்கலை விவசாயிகள் தயாரிப்பார்கள், பின்னர் ஜூன் மாதம் நாற்றை பிடுங்கி நடவு பணியில் ஈடுபடுவார்கள். மார்ச், ஏப்ரல் மாதம் இடையில் உள்ளதால், நிலத்தை தரிசாக போடாமல் அதனை பயனுள்ளதாக ஆக்கும் வகையில் வேளாண்மை துறை மானிய விலையில் உளுந்து விதைகளை விவசாயிகளுக்கு வழங்கியது.     தற்போது பறக்கை, புத்தளம், சுங்கான்கடை, தோட்டிகோடு உள்பட பல இடங்களில் விவசாயிகள் உளுந்து சாகுபடி செய்துள்ளனர். உளுந்து பயிர்கள் பூக்கதொடங்கி உள்ளது. தற்போது வேளாண்மைதுறை மானிய விலையில் உளுந்து விதை வழங்கியதால், விவசாயிகள் ஆர்வமுடம் உளுந்து சாகுபடி செய்துள்ளனர். இதனால் விவசாயிகளுக்கு உளுந்து மூலம் இதர வருமானம் கிடைப்பதுடன், தழைச்சத்துக்காக யூரியா வாங்கும் செலவு மிச்சமாகும்.

Similar News