ராமநாதபுரம் தமிழக வெற்றி கழக சார்பில் மத நல்லிணக்க இப்தார் நோன்பு நடைபெற்றது
கீழக்கரை தமிழக வெற்றி கழகத்தின் நகர் செயலாளர் அகமது ஜலாலுதீன் ஏற்பாட்டில் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.;
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கஸ்டமஸ் ரோடு அருகில் தமிழக வெற்றி கழகத்தின் நகர் செயலாளர் அகமது ஜலாலுதீன் ஏற்பாட்டில் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக வெற்றி கழக கிழக்கு மாவட்ட செயலாளர் மலர்விழி ஜெயபாலன் கலந்து கொண்டு இஸ்லாமியர்களோடு இணைந்து நோன்பு கஞ்சி அருந்தினார். ஏராளமான இஸ்லாமியர்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.