பொதுச்செயலாளர் பதவியிலிருந்து இபிஎஸ் தானாகவே விலகிக் கொள்வதே மரியாதை: ஓபிஎஸ்

பொதுச்செயலாளர் பதவியிலிருந்து இபிஎஸ் தானாகவே விலகிக் கொள்வதே மரியாதை என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்​னீர்​செல்​வம் தெரிவித்துள்ளார்.;

Update: 2025-03-28 05:03 GMT
பொதுச்செயலாளர் பதவியிலிருந்து இபிஎஸ் தானாகவே விலகிக் கொள்வதே மரியாதை: ஓபிஎஸ்
  • whatsapp icon
சென்னை விமான நிலை​யத்​தில் செய்​தி​யாளர்​களிடம் பேசிய அவர், பழனி​சாமி தலை​மையி​லானவர்​கள் தவறான பொதுக்​குழுவை கூட்டி இருந்​த​தால், நாங்​கள் அதி​முக தலைமை அலு​வல​கத்​துக்​குச் செல்​லலாம் என்று முடிவு செய்​தோம். தலைமை அலு​வல​கத்​துக்​கும், இந்​தி​யன் வங்​கிக்​கும் இடை​யில், 8 மாவட்ட செய​லா​ளர்​கள் எங்​களை வழிமறித்​து, தொடர்ந்து செல்ல விடா​மல் தடுத்​தனர். நாங்​கள் வந்த வாக​னத்தை தாக்​கி, ரகளை செய்​தனர். இது​தான் நடந்த உண்​மை. அவர்​கள் எங்​களைத் தாக்​கியதுடன், அவர்​களாகவே தலைமை அலு​வல​கத்​துக்​குள் புகுந்​து, அடி​யாட்​களை வைத்​து, பொருட்​களைச் சேதப்​படுத்​தினர். ஆனால், பழியை எங்​கள் மீது போட்​டனர். இவை அனைத்​தும் காவல் துறை​யின் வீடியோ பதி​வில் உள்​ளது. கட்​சி​யில் நான் மட்​டும் இணைய வேண்​டும் என்று கூற​வில்​லை. பிரிந்து கிடக்​கும் அதி​முக சக்​தி​கள் அனைத்​தும் ஒன்​றாக இணைய வேண்​டும் என்​று​தான் தெரி​வித்​தேன். அவ்​வாறு இணைந்​தால்​தான், தேர்​தலில் வெற்றி பெற முடி​யும். இதை நான் திரும்​பத் திரும்ப கூறிவரு​கிறேன். ஆனால், அதி​முக எந்​தக் காலத்​தி​லும் வெற்றி பெறக்​கூ​டாது என்ற நோக்​குடன் பழனி​சாமி தரப்​பினர் செயல்​பட்டுக் கொண்​டிருக்​கின்​றனர். ஒற்​றைத் தலைமை வந்​தால் அனைத்து தேர்​தல்​களி​லும் வெற்றி பெறு​வேன் என்று பழனி​சாமி கூறி​னார். ஆனால், அவர் தலை​மைக்கு வந்த பின்​னர், ஒரு தேர்​தலில்​கூட வெற்றி பெற​வில்​லை. பழனி​சாமி அவராகவே பொதுச் செய​லா​ளர் பதவி​யில் இருந்து வில​கிக் கொள்​வது​தான் அவருக்கு மரி​யாதை. இல்​லை​யேல் அவர் அவமரி​யாதையை மட்​டுமே சந்​திப்​பார் என ஓ.பன்​னீர்​செல்​வம் கூறினார்.

Similar News