திருவாரூரில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
திருவாரூரில் திமுக ஒன்றிய செயலாளர் புலிவலம் தேவா தலைமையில் மத்திய அரசை கண்டித்து பேரணியாக சென்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;
திருவாரூரில் திமுக ஒன்றிய செயலாளர் புலிவலம் தேவா தலைமையில் மத்திய அரசை கண்டித்து பேரணியாக சென்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது நூறு நாள் வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 4000 கோடியை தமிழ்நாட்டுக்கு தர மறுக்கும் ஒன்றிய பாஜக மோடி அரசை கண்டித்து தமிழக முழுவதும் இன்று பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருவாரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மாங்குடி பகுதியில் திமுக ஒன்றிய செயலாளர் புலிவலம் தேவா தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்று கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக நகர செயலாளர் பிரகாஷ் உள்ளிட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்