தீயில் கருதி தோட்ட காவலாளி உயிரிழப்பு

திருப்புவனம் அருகே தோட்ட காவலாளி தீயில் கருகி உயிரிழந்தார்;

Update: 2025-04-02 09:49 GMT
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே பெத்தானேந்தல் கிராமத்தைச் சோ்ந்தவர் மணி மகன் சேகா் (58). இவா் அருகே மஞ்சள்குடி என்ற இடத்தில் உள்ள தோட்டத்தில் காவலாளியாக வேலை பாா்த்து வந்தாா். இந்நிலையில், தோட்டத்தில் கிடந்த குப்பைகளை சேகரித்து தீ வைத்து எரித்த போது சேகா் தீயில் தவறி விழுந்தாா். இதில் அவா் உடல் கருகி உயிரிழந்தாா். இதுகுறித்து பூவந்தி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Similar News