சத்தியமங்கலத்தில் வக்கீல் தூக்குப்போட்டு தற்கொலை

சத்தியமங்கலத்தில் வக்கீல் தூக்குப்போட்டு தற்கொலை;

Update: 2025-04-04 02:51 GMT
சத்தியமங்கலத்தில் வக்கீல் தூக்குப்போட்டு தற்கொலை ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே ரங்கசமுத்திரம் கண்ணப்பன் நகரை சேர்ந்தவர் சுசீந்திரன் (வயது 38). வக்கீல். இவருடைய மனைவி பிரபாவதி. இவர் உக்கரம் சுகாதார நிலையத்தில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் நேற்று வீட்டில் சுசீந்திரன் தூக் குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுசீந்திரனின் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News