ஆசனூர் அருகே மின்சாரம் தடை மலை கிராம மக்கள் பாரி தவிப்பு

ஆசனூர் அருகே 2 -வது நாளாக மின்சாரம் இல்லாமல் தவிக்கும் 50-க்கும் மேற்பட்ட மலை கிராம மக்கள் மழைநீரை குடிநீராக பயன்படுத்தும் நிலை;

Update: 2025-04-06 04:58 GMT
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள கேர்மாளம் மலைகிராமங்களுக்கு சத்தியமங்கலம் ராஜன் நகர் பகுதியில் இருந்து ஆசனூர் மற்றும் 50 -க்கும் மேற்பட்ட மலைகிராமங்களுக்கு திம்பம் மலைபாதை வழியாக மின்சாரம் வழங்கப்பட்டு வந்ததது. நேற்று காலை 10 மணி முதல் மின்தடை ஏற்பட்டு உள்ளதால் மலைகிராம மக்கள் அடர்ந்த வனப்பகுதியில் மின்சாரம் இல்லாமல் இரவு முழுவதும் அவதிபட்டு வந்தனர். கேர்மாளம், திங்களூர் ஊராட்சிக்கு உட்பட்ட காடட்டி,சுஜில்கரை,கோட்டமாளம், பூதாளபுரம்,தொட்டி என 50 மேற்பட்ட மலைகிராமங்களில் மின்தடை ஏற்பட்டு உள்ளது. மின்தடையால் விடிய விடிய பொதுமக்கள் கடும் அவதிபட்டு வந்தனர்.மாணவ மாணவிகள் தேர்வுக்கு படிக்க முடியாமலும் ஊராட்சிக்கு சொந்தமான ஆழ்குழாய் கிணறு மின்சாரம் இல்லாததால் இயக்கப்படாத நிலையில் மழை நீரை குடிநீராக பயன்படுத்தி வருவதாகவும் வேதனையுடன் தெரிவித்தனர். சத்தியமங்கலம் இருந்து கேர்மாளம் வரை உள்ள மின் கம்பிகள் மிகவும் பழைமையானதாக இருப்பதால் அடிக்கடி மின் தடை ஏற்படுவதாக கூறுகின்றனர். மின்கம்பியை சரி செய்து சீரான மின்சாரம் வழங்கவேண்டும் என மலை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News