குமரி மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் தேசிய வறுமை ஒழிப்புத் திட்ட நிலுவை தொகை 3900கோடியை தமிழகத்துக்கு வழங்கிட கோரியும், இஸ்லாமிய மக்களுக்கு எதிரான வக்ஃப் சட்ட திருத்தத்தை கைவிட கோரியும் ஒன்றிய பி.ஜே.பி.அரசை வலியுறுத்தியும், பூதப்பாண்டியில் மின் அலுவலகத்தை உடனே கட்டி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரியும், அருமநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை உடனே சீரமைக்க வலியுறுத்தியும், பூதப்பாண்டி பூதலிங்கசாமி கோவில்தேரின் கீழ் தளத்தை சமன் செய்து கூண்டு அமைக்க வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் திட்டு விளை பேருந்து நிறுத்தம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்க்கு மாவட்ட குழு உறுப்பினர் மகேஷ் தலைமை வகித்தார். இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச்செயலாளர் அனில்குமார் போராட்டத்தை தொடங்கி வைத்தார். அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் சஜேஷ், அனைத்திந்திய முற்போக்குக் பேரவையின் மாநில துணைத்தலைவர் சுந்தரம், இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாவட்ட செயலாளர் செல்வராணி, செம்பை தங்கம் ,ஷோபணா உட்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சுபாஷ் சந்திர போஸ் முடித்து வைத்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அரசை கண்டித்தும் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பபட்டது.