டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு இன்று (ஏப்ரல் 14) நெல்லை சந்திப்பில் உள்ள அவரது உருவ சிலைக்கு பல்வேறு கட்சியினர், அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனால் சந்திப்பு பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.இதனை அடுத்து நெல்லை மாநகர காவல் உதவி ஆணையாளர் கீதா நேரடியாக களத்தில் இறங்கி போக்குவரத்தை சரி செய்தார்.