கையில் வாளுடன் சுற்றித்திரிந்த இளைஞர் கைது
திருப்பாச்சேத்தி அருகே கையில் வாளுடன் சுற்றித்திரிந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்;

சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே கண்ணாரிருப்பு விளக்கு பகுதியில் இளைஞர் ஒருவர் கையில் வாளுடன் சுற்றி திரிவதாக திருப்பாச்சேத்தி சிறப்பு சார்பு ஆய்வாளர் ஆரோக்கியசாமிக்கு தகவல் கிடைத்ததின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அவர் அதேபகுதியை சேர்ந்த சின்ன முத்து மகன் ஜமீன்ராஜா என்பவரை கைது செய்து செய்து, வாளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்