கோவை: நீத்தார் நினைவு தூணுக்கு மலர் வளையும் வைத்து அஞ்சலி !

கோவை மாவட்ட தீயணைப்பு அலுவலகத்தில் நீத்தார் நினைவு தூணுக்கு தீயணைப்புத் துறையினர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.;

Update: 2025-04-15 06:36 GMT
  • whatsapp icon
தீத்தொண்டு நாளை முன்னிட்டு கோவை மாவட்ட தீயணைப்பு அலுவலகத்தில் நீத்தார் நினைவு தூணுக்கு நேற்று தீயணைப்புத் துறையினர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். 1944-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14-ம் தேதி மும்பை துறைமுகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், தீயணைப்புப் பணியில் ஈடுபட்ட சில வீரர்கள் தீயில் கருகி வீரமரணம் அடைந்தனர். இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த தீயணைப்பு வீரர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14-ம் தேதி தீத்தொண்டு நாளாக அனுசரிக்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, கோவை மாவட்ட தீயணைப்பு அலுவலகத்தில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் புளுகாண்டி மற்றும் நிலைய அலுவலர்கள் ஆகியோர் நீத்தார் நினைவு தூணிற்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, தீயணைப்புப் பணிகளில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

Similar News