மானாமதுரையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மாயம்
மானாமதுரையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மாயமான நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்;

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ரயில்வே காலனி சவேரியார்புரம் பகுதியைச் சேர்ந்தவர் சின்னாண்டி மகன் சுதந்திரம். இவரது மகள் தேவி (வயது 37) மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படும் நிலையில் வீட்டில் இருந்த அவர் திடீரென மாயமானார். இது குறித்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் மானாமதுரை நாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன பெண்ணை தேடி வருகின்றனர்