திருப்பத்தூர் குளத்தில் சடலம் மீட்பு
திருப்பத்தூர் குளத்தில் ஆண் சடலம் மீட்பு - போலீசார் விசாரணை;
திருப்பத்தூர் சீதளி குளத்தில் ஒருவர் சடலமாக மிதந்தது குறித்து திருப்பத்தூர் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. பின்பு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். இதனை தொடர்ந்து தகவலின் அடிப்படையில் திருப்பத்தூர் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து குளத்தில் மிதந்தவரின் உடலை மீட்டனர். அப்போது இவர் திருப்பத்தூர் செட்டியதெருவை சேர்ந்தவர் காளிமுத்து என்பதும், 32 வயது இளைஞரான இவர் கூலி வேலை செய்து வருவதாகவும் தெரிய வந்தது. காளிமுத்து கழிப்பறைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளதாகவும், பகல் முழுவதும் வீட்டிற்கு வராததால் அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடி வந்த நிலையில் அவர் திருப்பத்தூர் சீதளி குளத்தில் சடலமாக மீட்கப்பட்டதும் தெரியவந்தது. பின்பு அவரது உடல் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்