திருக்கோயில் ஊழியர்கள் போராட்டம்

சுசீந்திரம்;

Update: 2025-04-24 14:26 GMT
குமரி மாவட்ட திருக்கோயில் ஊழியர்கள் சங்கம் சார்பில் இன்று சுசீந்திரம் அறநிலையத்துறை அலுவலகத்திற்கு முன்பு குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருக்கோயில் ஊழியர் சங்க தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் அஜிகுமார் வரவேற்று பேசினார். குமரி மாவட்ட கோயில்களுக்குள் அனுமதிக்கப்பட்ட நிரந்தர பணியிடங்களில் தற்போது 352 பேர் நீண்ட காலமாக பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு அரசு ஆணைப்படி ஊதியம் நிர்ணயம் செய்து சம்பளம் கொடுத்திடவும், அதற்கு உண்டான பணத்தை ஒதுக்கீடு செய்த பிறகும் வழங்காமல் இருக்கும் குமரி மாவட்ட திருக்கோயில் நிர்வாகத்தை கண்டித்தும் கோஷம் எழுப்பினர். போராட்டத்தை முன்னாள் எம். பி பெல்லார்மின் துவங்கி வைத்தார். இந்த போராட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ், மாவட்ட செயலாளர் செல்லசுவாமி ஆகியோர் கலந்து கொண்டு போராட்டம் குறித்து விளக்கி பேசினர். இந்தப் போராட்டத்தில் சிஐடியு மாவட்ட தலைவர் சிங்காரம், முன்னாள் எம்எல்ஏ லீமா ரோஸ்., நிர்வாகிகள் உஷா பாசி, முரளிதரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் மாலை வரை பேச்சுவார்த்தைக்கு அதிகாரிகள் யாரும் அழைக்காத காரணத்தினால் நியாயம் வேண்டி போராட்டம் நாளை தொடரும் என கோயில் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்

Similar News