வாலாஜா:திருமணம் ஆகாத விரத்தியில் வாலிபர் பலி!
திருமணம் ஆகாத விரத்தியில் வாலிபர் பலி!;
வாலாஜா ரம்பா முனி செட்டி தெருவை சேர்ந்தவர் சூர்யா (வயது 27), இவர் சொந்தமாக கார் வைத்து, வாடகைக்கு ஓட்டி வந்தார். இவருக்கு திருமணம் ஆகாததால் மனவேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வாலாஜா பெல்லியப்பா நகரில் உள்ள வாடகை வீட்டில் சூர்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் வாலாஜா போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிேரத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.