திருக்கோவிலூர் அடுத்த சந்தைப்பேட்டையில் மூடி வைக்கப்பட்டிருந்த திப்பு சுல்தான் பள்ளிவாசல் திறக்க உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில் சார் ஆட்சியர் ஆனந்தகுமார் சிங் ஜமாத்தார்களிடம் சாவி மற்றும் அனுமதி சான்றிதழை வழங்கினார். நிகழ்ச்சியில் தமுமுக மாவட்ட தலைவர் பசல் முகமத், காதர் உள்ளிட்ட இஸ்லாமியர்கள் உடன் இருந்தனர்.