வாகன ஓட்டிகள் அச்சம் வனத்துறை எச்சரிக்கை

தாளவாடி மலைப்பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தால் வாகன ஓட்டிகள் அச்சம்;

Update: 2025-04-25 06:37 GMT
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் தாளவாடி வனப்பகுதியில் யானை, சிறுத்தை, புலி, கரடி போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்நிலையில் நேற்று இரவு தாளவாடி மலைப்பகுதியில் தடுப்பு சுவர் ஒன்றில் சிறுத்தை நடமாடிக் கொண்டிருப்பதை கண்ட அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து தங்களது வாகனங்களை சற்று தொலைவில் நிறுத்தினர். அந்த சிறுத்தை சிறிது நேரம் தடுப்பு சுவரில் அங்கும் இங்கும் சுற்றிக் கொண்டிருந்தது. பின்னர் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இதன் பிறகு வாகன ஓட்டிகள் அந்த பகுதியை கடந்து சென்றனர். இது குறித்து வனத்துறையினர் கூறும் போது, வனப்பகுதியில் தற்போது வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறும் வனவிலங்குகள் சாலையோரம் தஞ்சமடைவது தொடர்கதையாகி வருகிறது. தற்போது திம்பம் மலைப்பாதை பகுதியில் சிறு கை நடமாட்டம் கண்டறியப்பட்டுள்ளது. எனவே இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டும். குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும். எக்காரணம் கொண்டும் வாகனங்களை வனப்பகுதியில் நிறுத்த வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News