ஒசூரில் வாகனம் மோதி நாமக்கல் டிரைவர் பலி.
ஒசூரில் வாகனம் மோதி நாமக்கல் டிரைவர் பலி.;
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் குட்டைக்கிணறு தெரு புகதியை சேர்ந்தவர் முத்துக்குமார் (38) லாரி டிரைவரான இவர் கடந்த 22- ம் தேதி அன்று பெங்களூரு சென்ற இவர் லாரியை ஒசூரில் நிறுத்தினார். பின்னர் சூசூவாடி அருகே பெங்களூரு-ஒசூர் சாலையைக் கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் முத்துக்குமார் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த ஒசூர் சிப்காட் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.