அரசு அலுவலகத்தில் பெண் அதிகாரி தற்கொலை முயற்சி

சிவகங்கையில் பெண் அதிகாரி தற்கொலைக்கு முயன்ற நிலையில் மருத்துவமனையில் அனுமதி;

Update: 2025-04-26 07:35 GMT
சிவகங்கை மாவட்டம், சிவகங்கையில் மாவட்ட தொழில் மையத்தில் கண்காணிப்பாளராக பணிபுரிந்துவரும் பொன்மதி என்கிற பெண் அலுவலர் தற்காலிக பணி நீக்கம் செய்ததை அறிந்து ஆணையை வாங்கும்போது அலுவலகத்திற்குள்ளேயே கரப்பான் பூச்சிக்கொள்ளி மருந்தை அருந்தி தற்கொலைக்கு முயன்றார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

Similar News