பயிர் கடனுதவிகளை வழங்கிய ஆட்சியர்
சிவகங்கையில் மாவட்ட ஆட்சியர் பயிர் கடனுதவிகளை வழங்கினார்;
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில், கூட்டுறவுத்துறையின் சார்பில் என்.என்.571 ஒக்கூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் விவசாயிகளுக்கு பயிர் கடனுதவிகளை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் வானதி உட்பட அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்