புதுக்கோட்டை, கீரனூரிலிருந்து குன்னாண்டார்கோவில் சாலை தேரடி டாஸ்மாக் கடை அருகே சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்த திருச்சி திருவரம்பூர் சூரியூர் காந்தலூர் பகுதியை சேர்ந்த முரளி (26) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்த 26 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.