கம்பம் வடக்கு காவல் நிலைய போலீசார் நேற்று (ஏப்.27) குற்றத் தடுப்பு சம்பந்தமாக ரோந்து பணி மேற்கொண்டனர். அப்பொழுது கம்பம் அமராவதி தியேட்டர் அருகே மகாலிங்கம் என்பவர் குடிபோதையில் பொதுமக்கள் தொந்தரவு செய்து கொண்டிருந்தார். போலீசார் எச்சரித்தும் அவர் கேட்காத நிலையில் மகாலிங்கம் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்