பெரியகுளம் காவல் நிலைய போலீசார் நேற்று (ஏப்.27) ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது வடகரை பாம்பாற்று பாலம் அருகே மதுரை முத்து என்பவர் அவ்வழியாக செல்லக்கூடிய பொதுமக்களை பார்த்து ஆபாசமாக பேசி திட்டிக் கொண்டிருந்தார். போலீசார் எச்சரித்தும் அவர் கேட்காத நிலையில் மதுரைமுத்து மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.