திருப்பத்தூரில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது
திருப்பத்தூரில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு;
திருப்பத்தூரில் நாளை வேலைவாய்ப்பு முகாம் திருப்பத்தூரில் வெள்ளிக் கிழமை (மே 16) தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இது தொடர் பாக ஆட்சியர் க.சிவசௌந்திரவல்லி புதன் கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை வேலைவாய்ப்பு பிரிவு மூலம் சிறிய அளவிலான தனியார் வேலைவாய்ப்பு முகாம் திருப்பத்தூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (மே 16) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. இதில் பல தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. முகாமில் 8, 10, 12-ஆம் வகுப்பு,பட்டப் படிப்பு,டிப்ளமோ, ஐ.டி.ஐ., செவிலியர், மருந்தாளுநர், பொறியியல் படித்தவர்கள் கலந்து கொண்டு பயன் பெற லாம் என அதில்தெரிவிக்கப்பட்டுள்ளார்