வாகன விபத்தில் ஒருவர் பலி.

மதுரை அழகர் கோவில் அருகே நடந்த சாலை விபத்தில் ஒருவர் பலியானார்.;

Update: 2025-05-16 05:02 GMT
மதுரை மாவட்டம் மேலூர் அழகர் கோவில் சாலையில் புலிபட்டியிருந்து நேற்று ( மே.15)தனியார் நிறுவன பணியாளர்களை ஏற்றுக்கொண்டு வேன் ஒன்று வந்து கொண்டிருந்தபோது அந்த சாலையில் எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த கீழவளவு வாச்சாம்பட்டியை பட்டியைச் சேர்ந்த பெரியபனையன் மகன் மகன் அய்யனார் (37) என்பவர் வேன் மீது மோதியதில் படுகாயமடைந்தது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவருக்கு மனைவியும் இரு மகள்களும் உள்ளனர். இதுகுறித்து மேலூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News