உத்தமபாளையம் காவல்துறையினர் குற்றத் தடுப்பு சம்பந்தமாக நேற்று (மே.15) ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் சுப்பிரமணி என்பவர் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவரிடம் இருந்து 30 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் சுப்பிரமணி மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.